Friday, October 22, 2010

மாவீரன் நேதாஜி !

வெற்றி வெற்றி என்ற சொல்லை
விரதமாகக் கொண்டதாலே
தோல்வி என்ற வார்த்தைகளை
தோல்வியுறச் செய்தவன் !

காங்கிரசில் எத்தனையோ
கருத்து மோதல் இருந்தபோதும்
கவலையின்றி முழக்கமிட்டு
கம்பீரமாய் நின்றவன் !

ஜனநாயக நெறிமுறையை
அன்றைக்கே சொன்னவன் -ஆம்
ஜனநாயக வழியினிலே
வெற்றி முழக்கமிட்டவன் !

வெற்றி என்ற சொல்லை மட்டும்
விரதமாகக் கொண்டதாலே
தோல்வி என்ற வார்த்தைகளை
துடைத்தெறியச் செய்தவன் !

ஐ என் ஏ என்ற சொல்லால் 
ஆதிக்க வெறியர்களை 
ஆட்டம் காண வைத்திட்ட
ஆற்றல்மிகு தளபதியே !

ஆம் !
நேதாஜி என்று சொன்னால் 
வீரம்தான் நினைவில் வரும் 
உன் உருவத்தைப் பார்த்தாலே 
உணர்ச்சிகள்தான் பொங்கி வரும் !

எழுச்சிமிக்க இளைஞர்களை      
உருவாக்கித் தந்ததாலே
எழுச்சியோடு இன்னமுந்தான்
நெஞ்சமெல்லாம் வாழ்கிறார் !

சாதி மத  பேதங்களை
சாக்கடைக்குள் எரிந்ததாலே
சாகசங்கள் செய்து இன்னும்
சாதனையாய் நிற்கிறார் !

தேச விடுதலைக்கு குரல் கொடுத்து
போர் முழக்கம் செய்தபோது
மென்மையான பெண்களையும்
வீர முழக்கமிட வைத்தவர் !

ஜான்சிராணி படையினிலே
தளபதியாய் முழக்கமிட்ட
வீரத்தாய் லட்சுமிசேகல் 
வாழும் நாட்டில் வாழ்கிறோம் !

நேதாஜி ! நீ 
வெள்ளையனை மிரள வைத்த 
சிம்ம சொப்பனம் !
வேறுபாட்டை ஓட வைத்த 
எங்கள் தேச அர்ப்பணம் !!

உன் உரத்த வார்த்தையெல்லாம் 
இன்னும்   கேட்குது !
உந்தன் பேரைச் சொன்னாலே 
வீரம்   பிறக்குது !! 

தலைவா !
உங்களுக்கு நாங்கள் செய்யும் 
நன்றி  ஒன்று தான் 
நமது நாடு நமது மக்கள் 
என்று சொல்லுவோம் !

நல்லவராய் சாதி மதச் 
சண்டை  நீங்கியே 
நாடு போற்ற ஒன்றுபட்டு- நாங்கள் 
வாழ்ந்து  கட்டுவோம் !!


  
   

Sunday, October 17, 2010

அண்ணல் காந்தியின் எண்ணங்கள்

இனிய கீதை குரான் பைபிள் எதனை நோக்கினும்
இறைவன் ஒன்று என்றுதானே எனக்கு தோன்றுது
இறைவன் என்பான் மேலுமில்லை கீழுமில்லையே
இருப்பதெல்லாம்  உங்களது இதயத்தில் தானே !

மதங்களெல்லாம் சரிசமமே என்று எண்ணினால்
மனங்களெல்லாம் உயர்ந்ததென்று என்றும் சொல்லுவேன்
மனிதனாகப் பிறந்த எவரும் செய்யும் சேவையில்
மகிழ்வுடனே இறைவனைத்தான் காண நினைக்கிறேன்

எப்படியோ சுதந்திரந்தான் அடைந்தோம் என்று நீ
எல்லாக் காரியமும் நடந்திடவே அரசினைத்தானே
எதிர்பார்ப்பதுடன் குறைகளையும் சொல்லுவ தெல்லாம்
எதற்கும் நாமே லாயக்கில்லை என்பதேயாகும் !

பலம் நிறைந்த மனிதனுக்கும் பலம் குறைந்த மனிதனுக்கும்
பாரபட்ச மின்றி சம வாய்ப்பளிக்கும் அரசுதான்
பாரதத்தின் உண்மையான மக்களரசு என்று
பாரெலாமே கேட்டிடத்தான் உரக்க நானும் சொல்லுவேன்

தேச சொத்தை வீணடிக்க உரிமை நமக்கு இல்லையே
தேசம் உயர சிக்கனத்தை கற்றுக்கொள்ள வேண்டுமே
தெளிவுடனே உங்கள் உள்ளம் என்றும் இருந்தால்
தேச பக்தரென்று உங்களைத்தான் சொல்லிடலாமே !

ஆயுதங்கள் ஏந்திடாமல் அகிம்சை வழியிலே
ஆங்கிலேயனை எதிர்த்து போர் புரிந்தான்
ஆயிரங்கள் இன்னலுற்று விடுதலை பெற்றார்
ஆதலாலே அண்ணலை நாம் தந்தை என்கிறோம் !

அண்ணல் காந்தி சொல்லிவைத்த பாதையில் சென்று
அர்த்தமுள்ள மனிதனாக வாழ்ந்திடு வோமே
அனைவரையும் நம்மவராய் எண்ணிடுவோம் -தேசம்
அமைதி காண என்றுந்தானே உழைத்திடுவோமே !!
      

Wednesday, September 22, 2010

இலட்சிய வேட்கை

மனிதராய் பிறந்திட்ட ஒவொருவருக்கும்
மனத்தினில் பற்பல ஆசையுண்டு
மனிதராய் வாழ்ந்திடும் ஆசைகள் விட்டு -சிலர்
மாபெரும் அரக்கராய் வாழ்வதும் உண்டு  !
ஆம்,
பெரும் பொருள் ஈட்டுதல் சிலருக்கு ஆசை
பெருமைகள் பேசுதல் சிலருக்கு ஆசை
பெரியோரை என்றென்றும் அவமதித்து
பெரும் பித்தராய் திரிவதில் சிலருக்கு ஆசை ! 

வரதட்சணை வாங்கிட சிலருக்கு ஆசை
வறியோரை வதைத்திடல் சிலருக்கு ஆசை
வன்முறை செய்வதில் சிலருக்கு ஆசை -தான் மட்டும்
வளமாக வாழ்ந்திட சிலருக்கு ஆசை  !

பொய் மட்டும் பேசிட சிலருக்கு ஆசை
பொறாமை கொள்வதில் சிலருக்கு ஆசை
பொறுமையைத் தொலைப்பதில் சிலருக்கு ஆசை
பொறுப்பினை மறப்பதே சிலருக்கு ஆசை  !

அதிகாரம் செய்வதில் சிலருக்கு ஆசை
அடங்கிப் போவதே சிலருக்கு ஆசை
அசிங்கங்கள் செய்வதில் சிலருக்கு ஆசை 
அர்த்த மில்லாமல் வாழ்வதில் ஆசை  !!

சிலர்...
மனித நேயத்தை விட்டுவிட்டு
மதங்களைச் சொல்லி ஆட்டி வைப்பார்
மாண்புகள் எல்லாம் விட்டுவிட்டு -தன்னை
மாபெரும் மனிதரென சொல்லிக் கொள்வார்  !

சாதியின் பெயரைச் சொல்லிக்கொண்டு
சாதியைத் தான்தான் காப்பதுபோல்
சாக்கடைச் சண்டைகள் செய்து தினம்
சாதனை செய்வதாய் பீற்றிக் கொள்வார்  !

ஏழையாய் இருந்தால் ஒரு சாதி !
ஏற்றம் பெற்றால் ஒரு சாதி  (!!) 
ஏனோ அதனை நாம் மறந்து -இன்னும்
எதனாலோ சண்டை செய்கின்றோம் ..(!) ?

       வேட்கை நமக்கு இருந்திட வேண்டும்
       வேற்றுமை நீங்கி வாழ்ந்திட வேண்டும்
       வேதங்கள் சொன்ன வழியில் நாமும் -இனி
       வெற்றி முழக்கம் செய்திட வேண்டும்  !

       மதவெறி தொலைத்திட வேட்கை வேண்டும்
       மகத்தான தொண்டுகள் செய்திட வேண்டும்
       மனிதனை மனிதனாய் மதித்திடும் செயலே
       மனத்தினில் என்றும் நிலைத்திட்  வேண்டும்  !!

அன்னையிடம் வேண்டல்  !

பண்பாடு  காத்திடும்
பாரதத்  திருநாட்டின்
ஜனநாயகம் என்றும் நிலைத்திடவும்

மனிதத்  தன்மைகள்
வற்றாது  என்றும்
மனிதங்கள் இங்கே வளர்ந்திடவும்

வளமைகள்   பெருகிட
ஓடிடும்  நதிகளை
ஓரிடம்  நிறுத்தாது
ஒன்றாக விரைவில் இணைத்திடவும்

கல்வியும்  தொழிலும்
காண்போர்  வியந்திட
இன்னும் இன்னும் உயர்ந்திடவும்

பாரத  அன்னையே
பணிவுடன்  உந்தன்
பாதங்கள்  தொழுது
வேண்டுகிறேன் -என்றும்
இலட்சியம் உன்னை வேண்டுகிறேன்  !

 

Monday, September 13, 2010

உலக மகளிர் தினம்

எழுந்திட வேண்டும் எழுந்திட வேண்டும்
ஏகமாக நீங்களெல்லாம் எழுந்திட வேண்டும்
உயர்ந்திட வேண்டும் ! உயர்ந்திட வேண்டும்! -என்றும்
உலகம் வியக்க உங்கள் கைகள் உயர்ந்திடவேண்டும் !!

அடிமையில்லை அடிமையில்லை அடிமை இல்லைதான்
ஆக்குகின்ற பெண்களென்றும் அடிமை இல்லைதான்
நோக்குகின்ற மனிதரெல்லாம் உங்களைத் தானே -இனி
நோகச்செய்யத் தான் நினைத்தால் பயப்பட வேண்டாம் !!

ஜான்சிராணி வீறுகொண்ட வேலு நாச்சியார்
உலகமெலாம் தான் வியந்த அன்னை இந்திரா
அகிலம் போற்ற சேவை செய்த அன்னை தெரசா
அவர்கள் காட்டிவைத்த வழிதனிலே எழுந்திட வேண்டும் !!

வேளாண்மையும் தொழில்துறையும் முன்னேறத் தானே
வேகமாகப் பெண்களெல்லாம் எழுந்திட வேண்டும்
வேதனைகள் அத்தனையும் ஒழிந்திடத் தானே -நீங்கள்
வெற்றி காணும் பெண்களாக எழுந்திட வேண்டும் !!

சாகடிக்கும் வரதட்சணை கொடுமையைத் தானே
சாகடிக்க நீங்களெல்லாம் எழுந்திட வேண்டும்
சாதிமத சாக்கடையில் வீழ்ந்திடாமலே -பெரும்
சாதனைகள் செய்திடத்தான் எழுந்திட வேண்டும்  !!      

Sunday, September 12, 2010

பயம் கொள்ள வேண்டாம் பெண்ணே ...!

போகப் பொருட்களாய் பெண்களை நினைத்திடும்

போக்குகள் மாறிட வில்லை

பெட்டி பெட்டியாய் வரதட்சணை கேட்டிடும்
பெரும் கொடுமைகள் மாறவும் இல்லை 

கட்டிய மனைவியை வேலையா ளாககிடும்
சிலர் -கயமைகள் மாறவும் இல்லை
ஒட்டிய வயிறுடன் குடும்பத்தைக் காத்திடும் -அவர்களின்
தியாக வரலாறு மாறவும் இல்லை  !

பெரும்பெரும் பதவியில் பெண்களே வந்தாலும்
பிரச்சனை  தீரவும் இல்லை
பெருமையாய்ச்  சொல்லிட இல்லறப் பெண்களின் -வாழ்வில்
 பேரதிசயம் நடக்கவும் இல்லை  !

பெண்களை வியாபாரப் பொருளாக்கும் பேடியை
ஒழித்திட வேண்டும் பெண்ணே
பெருவஞ்சகம் செய்திடும் நரிகளைக் கண்டால்
பொசுக்கிட வேண்டும் பெண்ணே  !

பொன்னே மணியே கனியே என்றுனை
போற்றினால் மயங்கிட லாகாது பெண்ணே
போற்றிடும் மனிதனின் போக்குகள் என்னென்று
புரிந்திட வேண்டும் பெண்ணே  !

இன்று ...
பெண்களைப் பெண்களே வியாபார மாக்கினால்
விட்டிட லாகுமோ பெண்ணே ...?
பெண்களைப் பெண்களே கேவலம் செய்தால்
பொறுத்திட லாகுமோ பெண்ணே ...?

பெற்ற உரிமைகள் ஏகமாய் விட்டு நீ
பேதையாய்ப் போகாதே பெண்ணே
பெண்ணே பெண்ணே நியாயங்கள் கேட்டிட
பயப்பட லாகாது பெண்ணே  !

பெட்டியுள் இருக்கும் பேதையாய் இருக்காமல்
சீறி எழுந்திடு பெண்ணே
பொறுமை பொறுமையென பொறுத்தது போதும்
பொங்கி எழுந்திடு பெண்ணே  !!

நல்ல பெண்  !

நல்ல மனிதர்க்கு நல்ல மனைவியாய்
நடந்திட வேண்டும்
பெற்ற தாயினைப் போல பெண்களை நினைத்திடும்
மனிதரை மதித்திட வேண்டும்
நல்ல மனிதரை மதித்திட வேண்டும் -என்றும்
மனிதரை மதித்திட வேண்டும்  !

எதற்க்கெடுத்தாலும் பிடிவாதம் கொள்ளாது
இணைந்தே போகிட வேண்டும்
என்றும் உன்னை நல்லபெண் என்று
எல்லோரும் உயர்த்திட வேண்டும்
நல்லதை நடத்திடும் நல்லபெண் என்று -உனை
நாடெலாம் போற்றிட வேண்டும்  !!
             

Saturday, September 11, 2010

உழவுத் தொழிலை உயர்த்திடுவோம்  !

ஏறுகலப்பை இல்லையின்னா நாமுங்க
எந்தக் காரியமும் நடத்த முடியாதுங்க
ஏழைபணக்  காரரிங்கு இல்லீங்க
எல்லாருமே இங்கே ஒன்னுதானுங்க !
        ஆமா ! எல்லாருமே இங்கே ஒன்னுதானுங்க !

காடுகரைய செழிக்க வச்சது யாருங்க ..?-நம்ம
கண்ணாத்தாளும் முருகப்பனுந் தானுங்க
காலை மாலை உங்களுக்குப் பாடுபட்டாங்க -அவுங்களை
கண் கலங்காமலே பாதுகாக்க வேணுங்க !                  
  
காலு கையி சகதிசேறு தானுங்க -அந்த
காத்தாயி உழைச்சாத்தான் சோறுங்க   
காடுகழனி நிறைஞ்சிடத்தான் வேணுங்க
காலம் போற்ற உழவுத் தொழிலை உயர்த்துங்க !

வற்றாத ஆறு நிறைய ஓடுதுங்க -அதை வச்சு
வளமான உழவுத் தொழிலை உயர்த்துங்க
வடக்கு தெற்கு என்றுதானே பார்க்காம -இந்த
வையமெலாம் வாழ்த்த நீங்க உயர்த்துங்க  !!

      
மரங்களை வளர்ப்போம் நண்பா  !

நல்லது செய்திட வேண்டும் வேண்டும்
        நண்பா  நண்பா
நல்லதை இன்றே செய்திட வேண்டும்
        நண்பா  நண்பா
நாடும் வீடும் வாழ்ந்திடத்தானே
        நண்பா  நண்பா
நாலு மரங்களைத்தானே வளர்த்திட வேண்டும்
        நண்பா ! நண்பா !

நிழல்தர மரமும் மழைதர மரமும்
        வேண்டும்  நண்பா
நினைத்திட வேண்டும் மரங்களை வளர்த்திட
        நண்பா  நண்பா
நீயும் நானும் சேர்ந்து உழைப்போம்
        நண்பா  நண்பா
நீண்டு அகன்ற மரங்களை வளர்ப்போம்
        நண்பா ! நண்பா !

நுண்ணிய அறிவால் உயர்ந்திட வேண்டும்
        நண்பா  நண்பா
நுட்பம் நிறைந்த மனிதர்கள் சொல்வதை
        கேட்டிடு  நண்பா
நூற்றுக் கணக்கிலே மரங்களை நடுவாய்
        நண்பா  நண்பா
நூலோர் சொன்ன வளங்களை காண்போம்
        நண்பா ! நண்பா !

நெற்றியில் வேர்வை சிந்த உழைத்தால்
        நண்பா  நண்பா
நெல்லும் மணியும் குவிந்திடு மிங்கே
        நண்பா  நண்பா
நேரும் துன்பம் எல்லாம் நீங்கும்
        நண்பா  நண்பா
நேர்த்தியாகவே வாழ்ந்திடலாமே
        நண்பா ! நண்பா !

அதனால்...
நல்லது செய்திட வேண்டும் வேண்டும்
        நண்பா  நண்பா
நல்லதை இன்றே செய்திட வேண்டும்
        நண்பா ! நண்பா !!
நாடும் வீடும் வாழ்ந்திடத்தானே
        நண்பா  நண்பா
நாளும்  மரங்களைத்தானே   வளர்த்திடுவோமே
        நண்பா ! நண்பா !!


சேகரிப்போம் மழை நீரை  !

சேர்த்திடுவோம் சேர்த்திடுவோம் செர்த்திடுவோமே 
சேர்ந்துவரும் மழை நீரை செர்த்திடுவோமே
சேகரிப்போம் சேகரிப்போம் சேகரிப்போமே
சேத்துக்குள்ளே  போகாமத்தான் சேகரிப்போமே  !

வீத்யோடி வீணாப் போகும் தண்ணீரைத்தானே
வீட்டுக்குள்ளே தொட்டிகட்டி தேக்கி வைப்போமே
வீண்வம்பு வெட்டிப்பேச்சு பேசாமத்தானே
விபரமாகத் தண்ணீரைத்தான் சேர்த்து வைப்போமே  !

நேற்ற்மின்றும் காலமொன்று போலிருக்குமா ..?
நெனச்சதெல்லாம் நடக்குமென்று  நம்ப முடியுமா.. ? (!)
நேரில் வரும் மழைநீரை சேர்த்து வைக்காம 
நேரும் துன்பம் அத்தனையும் போக்க முடியுமா ? (!!)

நாடும் வீடும் நல்லபடி இருந்திடத்தானே
நாமெல்லோரும் சேர்ந்துதானே உழைத்திடுவோமே
நம்ம தமிழகத்து முதல்வரம்மா சொன்னதைக் கேட்டு
நாம தலைவணங்கி ஏற்றுத்தானே செயல்படுவோமே  !

சிறுதுளியாய் சேர்த்துவைத்த மழை நீரைத்தானே
சிக்கனமா செலவழிக்க முயன்றிடுவோமே
சிரமங்களை வருமுன்னே தடுத்திடுவோமே
சிக்கலெல்லாம் போக்கி நாம மகிழ்ந்திடுவோமே  !!
        ஆமா !சிக்கலெல்லாம் போக்கி நாம மகிழ்ந்திடுவோமே  !!       

Wednesday, September 8, 2010


 இயக்கத்தில் சே ர்ந்திடுவீர் 

சிந்தனை செய்வாய் சிந்தனை செய்வாய் 
      இளையவனே -நீ 
சிந்தனை செய்தே சேர்ந்திடு சாரணர் 
      படையினிலே  ! 

பேடன்பவல் என்ற சாரணத் தந்தை 
      சொன்னதை நீயும் கேளு -அவன் 
சொன்னதைச் செய்தால் ஊரும் உலகுமுனை 
      போற்றிடுந்தானே பாரு !
சாதி மதங்களை கடந்தே நீயும் 
      சாதனை செய்தே நில்லு -நாம் 
சோதரர்தானே எல்லோரும் ஒன்றே 
      என்றே தினமும் சொல்லு !

எத்தனை உயிர்கள் எத்தனை இடத்தில் 
      இறைவன் படைத்தான் பாரு 
அத்தனை உயிரும் உன்போல் தானே 
      உள்மனதை நீ கேளு 
செடியும் கொடியும் மரமும் உயிர்கள் 
      என்றே நீயும் எண்ணு 
செய்திடும் நல்ல காரியம் என்றும் 
      வெல்லும் ! உன்பேர் சொல்லும் !!

நாணயம் நம்பிக்கை இரண்டு மிருந்தால் 
      வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்வு ;
நாடும் உயர்ந்து நீயும் வளர்ந்தால்
      அதுதான் உனக்கு உயர்வு !
நல்லது நினைத்து நல்லது நடந்தால்
      அதுவே நமக்கு மகிழ்வு ;
நாடும் நடப்பும் வளமாயிருந்தால்-என்றும்  
      அதுதான் நமக்கு உயர்வு !!
சாரணர் படை
வருது வருது வருது பாரு சாரணர் படை
வளமை செய்ய வருகுது  பார்  சாரணர் படை
ஒழுக்கமெலாம் காட்டி  நிற்கும் உன்னதப் படை 
ஒற்றுமையை நாட்டுகின்ற சாரணர் படை !
      தேச-ஒற்றுமையை நாட்டுகின்ற சாரனர்ப் படை !!

சாதிசமய பேதமெல்லாம் இங்கு இல்லைதான் 
சமத்துவ சமுதாயந்தானே  எங்கள் கொள்கைதான்
கடமை கண்(ணி)யம் கட்டுப்பாடு உணர்வுடன்தானே 
காரியங்கள் ஆற்றும் செயல்வீரர் நாங்களே !
      நல்ல-காரியங்கள் ஆற்றும் செயல்வீரர் நாங்களே !!   

தேசமெல்லாம் போற்றுகின்ற நேசப் படையிது
தேசியத்தை உயர்த்திடவே உதித்த படையிது
பறவை விலங்கு எல்லா உயிரும் நண்பன் என்றுதான் 
பண்புடனே நடந்துகொள்ளும் இளைஞர் படையிது !
      பண்புடனே நடந்துகொள்ளும் இளைஞர் படையிது !!

தேசப்பற்று தெய்வபக்தி இருந்திட வேண்டும் 
தெய்வமெல்லாம் ஒன்று என்று எண்ணிட வேண்டும் 
பேடன்பவல் என்ற எங்கள் சாரணத் தந்தை 
சொன்னதையே என்றும் நாங்கள் செய்து காட்டுவோம்  !
      சொன்னதையே என்றும் நாங்கள் செய்து காட்டுவோம் ! 
           
             சாரணர் படை !சாரணர் படை !!
             சாரணர் படை !சாரணர் படை !!


           
தேடி  அலைகின்றார் ...! (?) 
எங்கே..?.எங்கே..? எங்கே ? என்று
தேடி அலைகின்றார் !-இறைவன் 
எங்கே ? எங்கே ? எங்கே என்று 
தேடி அலைகின்றார் ! !

அங்கும் இங்கும் எங்கும் தானே 
தேடி அலைகின்றார் ;
அகிலமெலாமே இறைவனைத் தானே 
தேடி அலைகின்றார்..! !

அன்பும் பண்பும் தொலைத்தே இறைவனைத் 
தேடி அலைகின்றார் ;
அகிம்சை மறந்தே இறைவனைத் தானே 
தேடி அலைகின்றார் !!

காசும் பொருளும் கொடுத்தே இறைவனை 
வாங்கிட நினைக்கின்றார்..! (?)
கருணை மறந்தே இறைவனைத் தானே 
காணத் துடிக்கின்றார் !! (?)

சாதியின் பெயரால் சாமியைச் சொல்லி 
சாதிக்க நினைக்கின்றார் !
சாக்கடை நீரை சந்தனம் என்று 
சத்தியம் செய்கின்றார்..!!

இருக்குமிடத்தை மறந்தே இறைவனை 
இல்லாத இடந்தனிலே 
எங்கே ..? எங்கே..? எங்கே..? என்று 
தேடி அலைகின்றார்...!-ஆம் 
சிலர் தேடி அலைகின்றார் !! (?)
  
     

Monday, September 6, 2010

எங்கள் காஷ்மீர் !


காஷ்மீர் எங்கள் உடமை என்போம்
கார்க்கில் எங்கள் எல்லை என்போம்
காவல் செய்வது கடமை என்று
காத்திட எல்லோரும் வாருங்கள் !

இந்து இஸ்லாம் கிறித்தவரோடு
இனிய சீக்கியரும் இங்கே
இணைந்தே ஒன்றாய் நின்றே நாமும்
இந்திய தேசம் காப்போம் !

பாகிஸ்தானே பாகிஸ்தானே
பாரதத்தோடு மோதாதே
பாரதத்தோடு மோதிப் பார்த்தால்
பாழாய்ப் போவாய் மறவாதே !

எதிரிகளாக இங்கே நுழைந்தால்
எப்போதும் விடமாட்டோம்
எதிர்த்தே வந்தால் எவரையுந்தானே
எட்டி உதைத்திடுவோம் !

எல்லை காக்கும் போரில் இங்கே
எத்தனை வீரர் மாண்டார்..(?)
எல்லோரும் எம் சோதரர் அன்றோ (!)
எங்கள் வீர வணக்கம் !!

எங்கள் வீர வணக்கம் !
எங்கள் வீர வணக்கம் !
எங்கள் வீர வணக்கம் !
எங்கள் வீர வணக்கம் !!



அன்னையின் கரங்களில்

அன்னை பாரத அன்னை
அவள் கரங்களில் எத்தனை முல்லை
அண்ணல் காந்தியை தந்தாள்
அம்பேத்கார் கண்டு மகிழ்ந்தாள் !

வீரம் நிறைந்த நேதாஜி
விவேகமான வல்ல பாய்படேல்
தீரமிக்க நல்ல திலகர்
கப்போலோட்டிய வ.உ.சிதம்பரம்

லாலா லஜபதி மோதிலால்
ஜெயப்ரகாசும் மோரார்ஜியும்
கவிக்குயில் சரோஜினியும்
ஆச்சார்ய கிருபளானியும்

நேரு பிரானும் நந்தாவும்
ராஜாஜியும் நிஜலிங்கப்பாவும்
அறிவு நிறைந்த அசோக்மேத்தா
பகத்சிங் வீர வாஞ்சியும்

சுப்பிரமணிய சிவாவுமே-கொடி
காத்த திருப்பூர் குமரனும்
புரட்சிக் கவிஞன் பாரதியும் -எங்கள்
கறுப்புக் காந்தி காமராஜரும்

இந்தியம் காத்திடப் பாடுபட்டார் ;
இனிய சுதந்திரம் வாங்கித் தந்தார் !-அதை
இன்னல் பட்டேனும் காத்திடுவோம் ;
இன்பமாய் எல்லோரும் வாழ்ந்திடுவோம் !!

எங்கள் பாரதம் என்றிடுவோம்
எல்லோரும் ஒன்றாய் நின்றிடுவோம் !
        எங்கள் பாரதம் என்றிடுவோம் -என்றும்
        எல்லோரும் ஒன்றாய் நின்றிடுவோம் !!
                                                                                               

Friday, September 3, 2010

உன்னையே நீ அறிவாய் !!


அறிந்திட வேண்டும் ...

மனிதா அறிந்திட வேண்டும் ..!

அறிந்திட வேண்டும்...

உன்னை அறிந்திட வேண்டும்....!



உன்னையே நீ யாரெனத்தான் அறிந்திட வேண்டும்...

உண்மையான உள்ளத்தை நீ காட்டிட வேண்டும் ...!

அறிந்திட வேண்டும் அறிந்திட வேண்டும்

அறிந்திட வேண்டும் உன்னை அறிந்திட வேண்டும் !!



மனத்தினிலே நல்லதையே நினைத்திட வேண்டும்

மக்களெல்லாம் நம்மவர்கள் என்றிட வேண்டும்

மனிதனையே மதித்திடவே தெரிந்திட வேண்டும்

மதவெறியை மாய்த்திடவே எழுந்திட வேண்டும் !!



ஊமைச் சிறுவன்கூட நேசத்தோடு வாழ்கிறான்

ஊன்றுகோலாய் மக்களுக்கு உதவி செய்கிறான்

ஊருக்குள்ளே சண்டைதானே வேண்டாம் என்கிறான்

உறுதிகொண்டு உண்மையாகத் தானுழைக்கிறான் !!



எல்லாருக்கும் ரத்தமென்பது சிகப்புத் தானடா

என் வியர்வை உன் வியர்வை உப்புத்தானடா

எங்கு நோக்கினும் வெடி குண்டுகள் வெடிப்பதேனடா ?

ஏதுமறியா மக்களைக் கொன்று குவிப்பதேனடா ?



பயங்கர வாதமெல்லாம் நின்றுவிட்டாலே

பண்புமிக்க மனிதனாக உயர்ந்துவிட்டாலே

பாரதத்தின் சிறப்புமிக்க மூவண்ணக்கொடி

பாரெலாமே வியந்திடவே பறந்திடுந்தானே !!


யுத்தம் வேண்டாம் !!

யாரா யிருந்தாலும்
    யுத்தம் வேண்டாங்க
எவரா இருந்தாலும் - நாம்
    பேசித் தீர்ப்போங்க !

யாரும் யாருக்கும்
    அடிமை இல்லீங்க
யாரை யாரு அதிகாரம்
    செய்வது முறையாங்க ?

நீயா நானா பெரியவரென்ற
    போட்டி வேணாங்க
நியாயம் எதுவோ அதற்குத்தானே
    தலைதான் வணங்குங்க !

நிற்கதியாக நிற்கும் கோடி
    மக்கள் பாருங்க
நிமிர்ந்திட வேண்டும் உங்கள் நாடு
   என்றே உழைத்திடுங்க !

உங்கள் வீரம் காட்டிட நீங்கள்
    உயிர்ப்பலி செய்யாதீங்க
உலகம் அமைதி காணவே நீங்கள்
    உயர்வாய் எண்ணுங்க !!

Wednesday, September 1, 2010

இந்தியனாய் வாழ்வோம்  !

நீயும் நானும் பேசும்  மொழி வேறா இருக்கலாம்
நானும் நீயும் வாழும் மாநிலம் வேறா இருக்கலாம்
உனக்கும் எனக்கும் மதங்கள் என்பது வேறா இருக்கலாம்-ஆனால்
நீயும் நானும் இந்தியன் என்பதை மறக்கலாகுமா ..?

பணமிருப்பதாலே யாரும் மனிதரில்லையே
பதவிகளை வகிப்பதாலே மனிதரில்லையே
பரபரப்பு ஆர்ப்பாட்டம் உண்மை இல்லையே -நல்ல
பண்புதனை தாங்கி நின்றால் மனிதன் தானடா  !

மசூதியும் ஆலயமும் மாதா கோவிலும்
மனதையெல்லாம்  தூய்மையாக்கும்  இறைவன் வீடடா
மனதுக்குள்ளே வேற்றுமைகள் வருவதேனடா ?-நீ
மனிதனாக மாறி நின்று உயர்ந்து காட்டடா  !

உயர்ந்த மலையும் ஓடும் நதியும் இயற்கை தானடா
உனது எனது என்றேயதை பிரிப்ப தேனடா..?
உண்மைகளை ஒப்புக்கொள்ள மறுப்ப தேனடா ?-அதை
உணர்ந்துவிட்டால் நீயும் நானும் இந்தியன் தான்டா !!    


வேண்டாம் ! வேண்டாம் !!

எத்தனை பேர்  பேசினாலும் தெளியவில்லை...!
எத்தனை பேர் முயன்றாலும் முடியவில்லை...!
இன்னமும் ஏன் வேற்றுமைத் தீ அகலவில்லை ..?
இனிய நம் பாரதத்தில் ஏன் அமைதி இல்லை ..?

அமைதி நிலவ வேண்டும்.. !அமைதி நிலவ வேண்டும்...!
அமைதி நிலவ வேண்டும் ..! -என்றால் ..

சாதியின் பெயரால் சமயத்தின் பெயரால்
சண்டைகள் இனியும் வேண்டாம் வேண்டாம்
மொழியின் பெயரால் அமைப்பின் பெயரால்
மோதல்கள் இனியும் வேண்டாம் ! வேண்டாம் !!

நீரின்  பெயரால் நதியின் பெயரால்
நிம்மதி கெடுத்திட வேண்டாம் வேண்டாம்
எல்லா நதியும் இந்திய நதியே
என்பதை மறந்திட வேண்டாம் !வேண்டாம் !!

எனது மாநிலம் உனது மாநிலம்
என்றே பிரிவினை பேசிட வேண்டாம்
எல்லா மாநிலம் இணைந்தது ஏக
இந்தியா என்பதை மறந்திட வேண்டாம் !!

உயர்ந்தான் தாழ்ந்தான் என்றே சொல்லி
உணர்ச்சியை தூண்டிட வேண்டாம் வேண்டாம்
பண்பால் உயர்ந்தே காட்டிட வேண்டும்
பகைமை என்றும் வேண்டாம் ! வேண்டாம் !!

எங்கும் பசுமை எதிலும் புதுமை
ஏற்றிட மறந்திட வேண்டாம் வேண்டாம்
எல்லா மக்களும் இந்திய மக்கள்
என்பதை மறந்திட வேண்டாம் ! வேண்டாம் !!
  
 வேற்றுமை முறையோ ...?

இரத்தத்தின் நிறம் சிவப்பு
இவன் சிந்தும் வியர்வை கரிப்பு
இவ்வுலக முழுதுமிது ஒன்றடா
இருந்தும் வேற்றுமை வந்தது ஏனடா ..?

பிறந்து கொண்டு வந்தது மில்லை
இறந்து கொண்டு செல்வது மில்லை
பிறப்பில் உயர்வு தாழ்வு மில்லை
பிறரைப் பழிப்பது நியாய மில்லை  !!

சாதியும்  மதமும் காத்திடத்தானே    
சண்டைகள் செய்திட அல்ல ;
சாமியும் பூமியும் வணங்கிடத்தானே
சங்கடம் செய்திட அல்ல !!

பளிச்சிடும் குங்குமம் புனிதமடா
பண்பிருந் தால்தான் மனிதனடா !
பால் போல் சிரித்திட வேண்டுமடா -நம்
பாரதம் செழித்திட உழைத்திடடா !!

Tuesday, August 31, 2010

இறைவன் இருக்கின்றான் !

இறைவன் என்பவன் இருக்கின்றானடா
இதயமுள்ள மனிதனோடு வாழ்கின்றானடா
மனிதன் என்பவன் இருக்கின்றானடா
மனதில் கருணை உள்ளவனே மனிதன தானடா !

மனிதன் என்பவன் என்ன சொல்கிறான்...?
உண்மை மனிதன் என்பவன் என்ன சொல்கிறான்...?
மனிதத் தன்மை உள்ளவன் என்ன சொல்கிறான் ...?
மதிப்பு மிகுந்த மனிதனே என்ன சொல்கிறான்...?             
            என்ன சொல்கிறான்...? என்ன சொல்கிறான்...?

சாதி இல்லை மதமுமில்லை ஒன்றுமில்லையே
சண்டை செய்யும் யாரும் எனக்கு உறவு இல்லையே
சமயமென்னும் பேரைச் சொல்லி சங்கடம் செய்து
சதிகள் செய்யும் யாரும் எனக்கு தேவையில்லையே !    (தேவை...)

சாமி என்று சொல்வதிலே தவறு இல்லையே -அந்த
சாமி பேரில் கலகம் செய்தல் முறையுமில்லையே !
ஆசாமிகள் புனிதங்களை கேடுத்திடலாமா... ?-அதற்கு
ஆமாம் சாமி போட்டுக்கிட்டு உடன்படலாமா...?          (உடன்...)

சாதி வெறியில் வீழ்ந்திடாமல் எழுந்து நில்லடா -அந்த
சாக்கடையில் வீழ்ந்துவிட்டால் நாற்றம் தானடா !  
சிந்தனைகள் செய்திடவே வேண்டும் நீயடா-நல்ல
சாதனைகள் செய்து தினம் உயர்ந்து செல்லடா !!          (உயர்ந்து...)

பார் போற்றும் எங்கள் பாரத நாடு !

பாருக்குள் உயர்ந்தது எங்கள் நாடு
பார் போற்றும் பைந்தமிழர் வாழும் நாடு
பசுமையாய் பயிர்கள் தழைத்த நாடு-எங்கள் 
பாரத நாட்டுக்கு ஏதிங்கு ஈடு ! (?)

தித்திக்கும் தேன் தமிழ் தோன்றிய நாடு
திவ்விய தெலுங்கினை போற்றிடும் நாடு
தெள்ளிய கன்னட மொழி பாடும் நாடு
தேமதுரமாய் மலையாளம் பாடிடும் நாடு !

இந்தியும் குஜராத்தி வங்காளியும்
அஸ்ஸாமி பஞ்சாபி பீகாரியும் இன்னும்
எத்தனை மொழிகளோ பேசும் நாடு
என்றாலும் இங்கில்லை வேறுபாடு !   

இந்து இஸ்லாம் கிறித்து மதம்
இன்னும் எத்தனை மதங்களிருந்த போதும்
இனிமையாய் ஏற்றது சம்மதமே -ஆம்
எல்லோரும் இங்கே ஓர் குலமே !

வடக்கென்றும் தெற்க்கென்றும் இருந்த போதும்
வாழ்வதில் எல்லோரும் இந்தியர்தான் !
அத்தனை பேர்களும் சேர்ந்தோம்  ஒன்று
அதனாலே வியக்குது அகிலம் இன்று !!

Sunday, August 29, 2010

"நல்லிணக்கம் போற்றுவோம்" எனும் எனது நூலிலிருந்து ....
இலட்சியம் சிதம்பரம்.
 


வேண்டுகிறேன்

அன்னையே ஆதி பராசக்தியே
அல்லாவே எல்லாம் ஆனவரே
அன்பான எங்கள் ஏசுநாதரே
அஹிம்சையை போதித்த புத்த(ர்)பிரானே
அபிலாசைகள் துறந்திட்ட மகாவீரரே
அகங்களில் நிறைந்திட்ட சீக்கிய குருவே
அமைதியே உலகெலாம் நிலவிடத்தானே -என்றும் 
அருள்தர இலட்சியம் வேண்டுகிறேன்.

நல்லிணக்கம்

இறைவனை நினைப்பது ஒரு நல்லிணக்கம்
அவரவர் மனத்தில் அவரவர் இறைவனை 
அவரவர் முறைப்படி அவரவர் நினைத்தால்
அனைவருக்கும் அது சிறந்த நல்லிணக்கம் !

எம்மொழி எனக்கு உயர்வென்பதும்
எம்மதம் எனக்கு உயர்வென்பதும்
எம்மவர் எனக்கு உயர்வென்பதும்
எண்ணுதல் என்றும் தவறு அல்ல !

எம்முடை(யது) மட்டுமே உயர்வென எண்ணி
எதிரியாய் பிறரைத   தான் நினைத்து
எவரது உணர்வையும் புண்படுத்த
எத்தனித்தால் அது இணக்கமல்ல !

எத்தனை மதமும் எத்தனை சாதியும்
எத்தனை மொழியும் எத்தனை இறைவனும்
எத்தனை இங்கே இருந்தாலும்- நாங்கள்
எல்லோரும் இந்தியர் என்பதே நல்லிணக்கம் !!

மரபு

மரபினை மறக்காது இருப்பது மரபு
மறந்தால் நோகும் என்மன உணர்வு
மனத்தினில் ஒன்றினை நான் நினைத்து
மறந்தும் மற்றதை எழுதாது என் மரபு !

இலக்கணம் எல்லாம் எனக்கு தெரியும் ..(!)
இலக்கியம் எல்லாம் எனக்கு தெரியும் ..(!)
இப்படியெல்லாம் எதையேனும் சொல்லி
இருப்போரை ஏமாற்றல் எந்தன் மரபு அல்ல !!  

நல்லவர்கள் வாழ்த்த வேண்டும் !

அன்பு என்னும் அறவழியை ஏந்திட வேண்டும்
ஆயுளெல்லாம் நிம்மதியாய் இருந்திட வேண்டும்
ஆர்ப்பாட்டம் அத்தனையும் விட்டிட வேண்டும்
ஆடிப்பாடி அகமகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் !

ஆசைப்பட்டு தீயவழியில் சென்றிட வேண்டாம்
ஆனந்தங்கள் அத்தனையும் தொலைத்திட வேண்டாம்
ஆனந்தமாய் வாழ்ந்திடவே வேண்டுமென்று நீ
ஆ(யா)ரையேனும் துன்புறுத்த நினைத்திட வேண்டாம் !

நாணயமாய் நடந்திடவே முயன்றிட வேண்டும்
நாலுகாசு நேர்மையாக சேர்த்திட வேண்டும்
நாட்டுப்பற்றை மனத்தினிலே வளர்த்திட வேண்டும்
நாடுயர்ந்தால் நாமுயர்வோம் என நினைத்திட வேண்டும் !

நல்ல நல்ல காரியந்தான் செய்திட வேண்டும்     
நலம் கிடைக்க அனைவருக்கும் உதவிட வேண்டும்
நல்லிணக்க வழியினிலே சென்றிட வேண்டும் -என்றும்
நல்லவர்கள் வாழ்த்தும்படி வாழ்ந்திட வேண்டும் !!

தேசியக் கொடியை
வணங்குகிறோம்
!!

வணங்குகிறோம்
கொடியை வணங்குகிறோம்
இந்திய தேசிய
கொடியை வணகுகிறோம் !

தியாகத்தை நினைவூட்டும் காவி நிறம் ,
வெள்ளை உள்ளத்தை வெளிக்காட்டும்
வெண்மை நிறம் ;
பசுமையும் வளமையும் செழுமையும்
காட்டும் பச்சை நிறம் ;

தருமச் சக்கரத்தை நடுவில் ஏந்தி
கம்பீரமாக உயர்ந்து பறக்கும்
எங்கள் இந்திய தேசிய
மூவண்ணக் கொடியை வணங்குகிறோம் !!

இந்தியத் திருநாட்டின் உயிர் நாடியாம்
உழவுத் தொழிலின் மேன்மையைச் சொல்லும்
எங்கள் இந்திய தேசிய
கொடியை வணங்குகிறோம் !

அன்னையே பாரத அன்னையே -நீ   
உயர்த்திப் பிடித்திருக்கும்
இந்திய தேசியக்    
கொடி உயர்ந்திடத்தானே  
எழுச்சி முழக்கமிட்டு வணங்குகிறோம் !-மிகுந்த
பணிவுடன் உன்னை வணங்குகிறோம் !!

சுதந்திரம் ! சுதந்திரம் !!

உரிமை தந்த சுதந்திரம்
உயர வைத்த சுதந்திரம்
உண்மையான சுதந்திரம்
உள்ளம் நிறைந்த சுதந்திரம் !!
      சுதந்திரம் !சுதந்திரம் !!
      சுதந்திரம் !சுதந்திரம் !!

கொள்ளையடித்த வெள்ளையரை 
விரட்டியடித்த சுதந்திரம் !
கொள்கை மிக்க தலைவரெல்லாம்
வாங்கித் தந்த சுதந்திரம் !
      சுதந்திரம் !சுதந்திரம்!!
      சுதந்திரம் !சுதந்திரம் !!

எல்லா மக்களும் எல்லா வளமும்
பெற்றிட வாங்கிய சுதந்திரம் !
எத்தனை மதங்கள் இருந்தபோதும்
இந்தியரான சுதந்திரம் !!
      சுதந்திரம் !சுதந்திரம் !!
      சுதந்திரம் !சுதந்திரம் !!

எல்லை வந்து தொல்லை தந்தால்
விரட்டியடிக்கும்   சுதந்திரம் !
எங்கள் நாடு  இந்திய  நாடு
என்றே சொல்லும் சுதந்திரம் !!
      சுதந்திரம் ! சுதந்திரம் !!
      சுதந்திரம் ! சுதந்திரம் !!

Tuesday, August 17, 2010

நம் இந்திய சுதந்திரம் -2010

காந்தியடிகள் சொன்ன மந்திரம் ...
கருணையுள்ள அகிம்சை மந்திரம் !
தேசமெல்லாம் போற்றும் மந்திரம் ...
தேச மக்களையே இயக்கும் எந்திரம் !!

எத்தனைபேர் இரத்தம் சிந்தி வந்த சுதந்திரம் ...
எத்தனையோ தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் !!
ஏழைகளும் கோழைகளாய் ஆகிடாமலே -என்றும்
ஏற்றம் பெற எல்லோருக்கும் கிடைத்த சுதந்திரம் !!

         சுதந்திரம்!சுதந்திரம்!!சுதந்திரம்!!!
         சுதந்திரம்!சுதந்திரம்!!இனிய சுதந்திரம்!!!

வெள்ளையரை விரட்டியடித்து பெற்ற சுதந்திரம்
தொல்லை நீங்கி உரிமை காக்க வந்த சுதந்திரம்!-அதனால் ..
கொள்ளையடிக்க எவர்க்குமில்லை இங்கு சுதந்திரம் (!!)-நல்ல
கொள்கை வழியில் ஒன்றுபட்டு உயர சுதந்திரம் !!          (சுதந்திரம்...)

ஊழல்களை செய்பவர்கள் திருந்திட வேண்டும் ...
ஊதாறித்  தனங்களையே நிறுத்திட வேண்டும்!
ஊருலகம் போற்றிடவே நடந்திட வேண்டும் -தினம்   
ஊக்கமாக தானுழைத்து உயர்ந்திட வேண்டும் !!         (சுதந்திரம்...)

பண்பாடுகளை என்றும் நாமே காத்திட வேண்டும்
பயங்கர வாதங்களை விரட்டிட வேண்டும்!
பயமில்லாத அமைதி வாழ்க்கை நிலவிட வேண்டும்-நம்
பாரதத்தை உயர்த்தி நாமும் நிமிர்ந்திட வேண்டும் !!         (சுதந்திரம்...)

         சுதந்திரம்!சுதந்திரம்!!சுதந்திரம்!!!
         சுதந்திரம்!சுதந்திரம்!!இனிய சுதந்திரம்!!!