Monday, September 13, 2010

உலக மகளிர் தினம்

எழுந்திட வேண்டும் எழுந்திட வேண்டும்
ஏகமாக நீங்களெல்லாம் எழுந்திட வேண்டும்
உயர்ந்திட வேண்டும் ! உயர்ந்திட வேண்டும்! -என்றும்
உலகம் வியக்க உங்கள் கைகள் உயர்ந்திடவேண்டும் !!

அடிமையில்லை அடிமையில்லை அடிமை இல்லைதான்
ஆக்குகின்ற பெண்களென்றும் அடிமை இல்லைதான்
நோக்குகின்ற மனிதரெல்லாம் உங்களைத் தானே -இனி
நோகச்செய்யத் தான் நினைத்தால் பயப்பட வேண்டாம் !!

ஜான்சிராணி வீறுகொண்ட வேலு நாச்சியார்
உலகமெலாம் தான் வியந்த அன்னை இந்திரா
அகிலம் போற்ற சேவை செய்த அன்னை தெரசா
அவர்கள் காட்டிவைத்த வழிதனிலே எழுந்திட வேண்டும் !!

வேளாண்மையும் தொழில்துறையும் முன்னேறத் தானே
வேகமாகப் பெண்களெல்லாம் எழுந்திட வேண்டும்
வேதனைகள் அத்தனையும் ஒழிந்திடத் தானே -நீங்கள்
வெற்றி காணும் பெண்களாக எழுந்திட வேண்டும் !!

சாகடிக்கும் வரதட்சணை கொடுமையைத் தானே
சாகடிக்க நீங்களெல்லாம் எழுந்திட வேண்டும்
சாதிமத சாக்கடையில் வீழ்ந்திடாமலே -பெரும்
சாதனைகள் செய்திடத்தான் எழுந்திட வேண்டும்  !!      

No comments:

Post a Comment