Sunday, September 12, 2010

பயம் கொள்ள வேண்டாம் பெண்ணே ...!

போகப் பொருட்களாய் பெண்களை நினைத்திடும்

போக்குகள் மாறிட வில்லை

பெட்டி பெட்டியாய் வரதட்சணை கேட்டிடும்
பெரும் கொடுமைகள் மாறவும் இல்லை 

கட்டிய மனைவியை வேலையா ளாககிடும்
சிலர் -கயமைகள் மாறவும் இல்லை
ஒட்டிய வயிறுடன் குடும்பத்தைக் காத்திடும் -அவர்களின்
தியாக வரலாறு மாறவும் இல்லை  !

பெரும்பெரும் பதவியில் பெண்களே வந்தாலும்
பிரச்சனை  தீரவும் இல்லை
பெருமையாய்ச்  சொல்லிட இல்லறப் பெண்களின் -வாழ்வில்
 பேரதிசயம் நடக்கவும் இல்லை  !

பெண்களை வியாபாரப் பொருளாக்கும் பேடியை
ஒழித்திட வேண்டும் பெண்ணே
பெருவஞ்சகம் செய்திடும் நரிகளைக் கண்டால்
பொசுக்கிட வேண்டும் பெண்ணே  !

பொன்னே மணியே கனியே என்றுனை
போற்றினால் மயங்கிட லாகாது பெண்ணே
போற்றிடும் மனிதனின் போக்குகள் என்னென்று
புரிந்திட வேண்டும் பெண்ணே  !

இன்று ...
பெண்களைப் பெண்களே வியாபார மாக்கினால்
விட்டிட லாகுமோ பெண்ணே ...?
பெண்களைப் பெண்களே கேவலம் செய்தால்
பொறுத்திட லாகுமோ பெண்ணே ...?

பெற்ற உரிமைகள் ஏகமாய் விட்டு நீ
பேதையாய்ப் போகாதே பெண்ணே
பெண்ணே பெண்ணே நியாயங்கள் கேட்டிட
பயப்பட லாகாது பெண்ணே  !

பெட்டியுள் இருக்கும் பேதையாய் இருக்காமல்
சீறி எழுந்திடு பெண்ணே
பொறுமை பொறுமையென பொறுத்தது போதும்
பொங்கி எழுந்திடு பெண்ணே  !!

நல்ல பெண்  !

நல்ல மனிதர்க்கு நல்ல மனைவியாய்
நடந்திட வேண்டும்
பெற்ற தாயினைப் போல பெண்களை நினைத்திடும்
மனிதரை மதித்திட வேண்டும்
நல்ல மனிதரை மதித்திட வேண்டும் -என்றும்
மனிதரை மதித்திட வேண்டும்  !

எதற்க்கெடுத்தாலும் பிடிவாதம் கொள்ளாது
இணைந்தே போகிட வேண்டும்
என்றும் உன்னை நல்லபெண் என்று
எல்லோரும் உயர்த்திட வேண்டும்
நல்லதை நடத்திடும் நல்லபெண் என்று -உனை
நாடெலாம் போற்றிட வேண்டும்  !!
             

No comments:

Post a Comment