Tuesday, August 17, 2010

நம் இந்திய சுதந்திரம் -2010

காந்தியடிகள் சொன்ன மந்திரம் ...
கருணையுள்ள அகிம்சை மந்திரம் !
தேசமெல்லாம் போற்றும் மந்திரம் ...
தேச மக்களையே இயக்கும் எந்திரம் !!

எத்தனைபேர் இரத்தம் சிந்தி வந்த சுதந்திரம் ...
எத்தனையோ தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் !!
ஏழைகளும் கோழைகளாய் ஆகிடாமலே -என்றும்
ஏற்றம் பெற எல்லோருக்கும் கிடைத்த சுதந்திரம் !!

         சுதந்திரம்!சுதந்திரம்!!சுதந்திரம்!!!
         சுதந்திரம்!சுதந்திரம்!!இனிய சுதந்திரம்!!!

வெள்ளையரை விரட்டியடித்து பெற்ற சுதந்திரம்
தொல்லை நீங்கி உரிமை காக்க வந்த சுதந்திரம்!-அதனால் ..
கொள்ளையடிக்க எவர்க்குமில்லை இங்கு சுதந்திரம் (!!)-நல்ல
கொள்கை வழியில் ஒன்றுபட்டு உயர சுதந்திரம் !!          (சுதந்திரம்...)

ஊழல்களை செய்பவர்கள் திருந்திட வேண்டும் ...
ஊதாறித்  தனங்களையே நிறுத்திட வேண்டும்!
ஊருலகம் போற்றிடவே நடந்திட வேண்டும் -தினம்   
ஊக்கமாக தானுழைத்து உயர்ந்திட வேண்டும் !!         (சுதந்திரம்...)

பண்பாடுகளை என்றும் நாமே காத்திட வேண்டும்
பயங்கர வாதங்களை விரட்டிட வேண்டும்!
பயமில்லாத அமைதி வாழ்க்கை நிலவிட வேண்டும்-நம்
பாரதத்தை உயர்த்தி நாமும் நிமிர்ந்திட வேண்டும் !!         (சுதந்திரம்...)

         சுதந்திரம்!சுதந்திரம்!!சுதந்திரம்!!!
         சுதந்திரம்!சுதந்திரம்!!இனிய சுதந்திரம்!!!

No comments:

Post a Comment