Wednesday, September 8, 2010


 இயக்கத்தில் சே ர்ந்திடுவீர் 

சிந்தனை செய்வாய் சிந்தனை செய்வாய் 
      இளையவனே -நீ 
சிந்தனை செய்தே சேர்ந்திடு சாரணர் 
      படையினிலே  ! 

பேடன்பவல் என்ற சாரணத் தந்தை 
      சொன்னதை நீயும் கேளு -அவன் 
சொன்னதைச் செய்தால் ஊரும் உலகுமுனை 
      போற்றிடுந்தானே பாரு !
சாதி மதங்களை கடந்தே நீயும் 
      சாதனை செய்தே நில்லு -நாம் 
சோதரர்தானே எல்லோரும் ஒன்றே 
      என்றே தினமும் சொல்லு !

எத்தனை உயிர்கள் எத்தனை இடத்தில் 
      இறைவன் படைத்தான் பாரு 
அத்தனை உயிரும் உன்போல் தானே 
      உள்மனதை நீ கேளு 
செடியும் கொடியும் மரமும் உயிர்கள் 
      என்றே நீயும் எண்ணு 
செய்திடும் நல்ல காரியம் என்றும் 
      வெல்லும் ! உன்பேர் சொல்லும் !!

நாணயம் நம்பிக்கை இரண்டு மிருந்தால் 
      வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்வு ;
நாடும் உயர்ந்து நீயும் வளர்ந்தால்
      அதுதான் உனக்கு உயர்வு !
நல்லது நினைத்து நல்லது நடந்தால்
      அதுவே நமக்கு மகிழ்வு ;
நாடும் நடப்பும் வளமாயிருந்தால்-என்றும்  
      அதுதான் நமக்கு உயர்வு !!
சாரணர் படை
வருது வருது வருது பாரு சாரணர் படை
வளமை செய்ய வருகுது  பார்  சாரணர் படை
ஒழுக்கமெலாம் காட்டி  நிற்கும் உன்னதப் படை 
ஒற்றுமையை நாட்டுகின்ற சாரணர் படை !
      தேச-ஒற்றுமையை நாட்டுகின்ற சாரனர்ப் படை !!

சாதிசமய பேதமெல்லாம் இங்கு இல்லைதான் 
சமத்துவ சமுதாயந்தானே  எங்கள் கொள்கைதான்
கடமை கண்(ணி)யம் கட்டுப்பாடு உணர்வுடன்தானே 
காரியங்கள் ஆற்றும் செயல்வீரர் நாங்களே !
      நல்ல-காரியங்கள் ஆற்றும் செயல்வீரர் நாங்களே !!   

தேசமெல்லாம் போற்றுகின்ற நேசப் படையிது
தேசியத்தை உயர்த்திடவே உதித்த படையிது
பறவை விலங்கு எல்லா உயிரும் நண்பன் என்றுதான் 
பண்புடனே நடந்துகொள்ளும் இளைஞர் படையிது !
      பண்புடனே நடந்துகொள்ளும் இளைஞர் படையிது !!

தேசப்பற்று தெய்வபக்தி இருந்திட வேண்டும் 
தெய்வமெல்லாம் ஒன்று என்று எண்ணிட வேண்டும் 
பேடன்பவல் என்ற எங்கள் சாரணத் தந்தை 
சொன்னதையே என்றும் நாங்கள் செய்து காட்டுவோம்  !
      சொன்னதையே என்றும் நாங்கள் செய்து காட்டுவோம் ! 
           
             சாரணர் படை !சாரணர் படை !!
             சாரணர் படை !சாரணர் படை !!


           
தேடி  அலைகின்றார் ...! (?) 
எங்கே..?.எங்கே..? எங்கே ? என்று
தேடி அலைகின்றார் !-இறைவன் 
எங்கே ? எங்கே ? எங்கே என்று 
தேடி அலைகின்றார் ! !

அங்கும் இங்கும் எங்கும் தானே 
தேடி அலைகின்றார் ;
அகிலமெலாமே இறைவனைத் தானே 
தேடி அலைகின்றார்..! !

அன்பும் பண்பும் தொலைத்தே இறைவனைத் 
தேடி அலைகின்றார் ;
அகிம்சை மறந்தே இறைவனைத் தானே 
தேடி அலைகின்றார் !!

காசும் பொருளும் கொடுத்தே இறைவனை 
வாங்கிட நினைக்கின்றார்..! (?)
கருணை மறந்தே இறைவனைத் தானே 
காணத் துடிக்கின்றார் !! (?)

சாதியின் பெயரால் சாமியைச் சொல்லி 
சாதிக்க நினைக்கின்றார் !
சாக்கடை நீரை சந்தனம் என்று 
சத்தியம் செய்கின்றார்..!!

இருக்குமிடத்தை மறந்தே இறைவனை 
இல்லாத இடந்தனிலே 
எங்கே ..? எங்கே..? எங்கே..? என்று 
தேடி அலைகின்றார்...!-ஆம் 
சிலர் தேடி அலைகின்றார் !! (?)
  
     

No comments:

Post a Comment