இயக்கத்தில் சே ர்ந்திடுவீர்
பேடன்பவல் என்ற சாரணத் தந்தை
எத்தனை உயிர்கள் எத்தனை இடத்தில்
நாணயம் நம்பிக்கை இரண்டு மிருந்தால்
சாதிசமய பேதமெல்லாம் இங்கு இல்லைதான்
தேசமெல்லாம் போற்றுகின்ற நேசப் படையிது
தேசப்பற்று தெய்வபக்தி இருந்திட வேண்டும்
சாரணர் படை !சாரணர் படை !!
அங்கும் இங்கும் எங்கும் தானே
அன்பும் பண்பும் தொலைத்தே இறைவனைத்
காசும் பொருளும் கொடுத்தே இறைவனை
சாதியின் பெயரால் சாமியைச் சொல்லி
இருக்குமிடத்தை மறந்தே இறைவனை
சிந்தனை செய்வாய் சிந்தனை செய்வாய்
இளையவனே -நீ
சிந்தனை செய்தே சேர்ந்திடு சாரணர்
படையினிலே !
பேடன்பவல் என்ற சாரணத் தந்தை
சொன்னதை நீயும் கேளு -அவன்
சொன்னதைச் செய்தால் ஊரும் உலகுமுனை
போற்றிடுந்தானே பாரு !
சாதி மதங்களை கடந்தே நீயும்
சாதனை செய்தே நில்லு -நாம்
சோதரர்தானே எல்லோரும் ஒன்றே
என்றே தினமும் சொல்லு !
எத்தனை உயிர்கள் எத்தனை இடத்தில்
இறைவன் படைத்தான் பாரு
அத்தனை உயிரும் உன்போல் தானே
உள்மனதை நீ கேளு
செடியும் கொடியும் மரமும் உயிர்கள்
என்றே நீயும் எண்ணு
செய்திடும் நல்ல காரியம் என்றும்
வெல்லும் ! உன்பேர் சொல்லும் !!
நாணயம் நம்பிக்கை இரண்டு மிருந்தால்
வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்வு ;
நாடும் உயர்ந்து நீயும் வளர்ந்தால்
அதுதான் உனக்கு உயர்வு !
நல்லது நினைத்து நல்லது நடந்தால்
அதுவே நமக்கு மகிழ்வு ;
நாடும் நடப்பும் வளமாயிருந்தால்-என்றும்
அதுதான் நமக்கு உயர்வு !!
சாரணர் படை
வருது வருது வருது பாரு சாரணர் படை
வளமை செய்ய வருகுது பார் சாரணர் படை
ஒழுக்கமெலாம் காட்டி நிற்கும் உன்னதப் படை
ஒற்றுமையை நாட்டுகின்ற சாரணர் படை !
தேச-ஒற்றுமையை நாட்டுகின்ற சாரனர்ப் படை !!
சாதிசமய பேதமெல்லாம் இங்கு இல்லைதான்
சமத்துவ சமுதாயந்தானே எங்கள் கொள்கைதான்
கடமை கண்(ணி)யம் கட்டுப்பாடு உணர்வுடன்தானே
காரியங்கள் ஆற்றும் செயல்வீரர் நாங்களே !
நல்ல-காரியங்கள் ஆற்றும் செயல்வீரர் நாங்களே !!
தேசமெல்லாம் போற்றுகின்ற நேசப் படையிது
தேசியத்தை உயர்த்திடவே உதித்த படையிது
பறவை விலங்கு எல்லா உயிரும் நண்பன் என்றுதான்
பண்புடனே நடந்துகொள்ளும் இளைஞர் படையிது !
பண்புடனே நடந்துகொள்ளும் இளைஞர் படையிது !!
தேசப்பற்று தெய்வபக்தி இருந்திட வேண்டும்
தெய்வமெல்லாம் ஒன்று என்று எண்ணிட வேண்டும்
பேடன்பவல் என்ற எங்கள் சாரணத் தந்தை
சொன்னதையே என்றும் நாங்கள் செய்து காட்டுவோம் !
சொன்னதையே என்றும் நாங்கள் செய்து காட்டுவோம் !
சாரணர் படை !சாரணர் படை !!
சாரணர் படை !சாரணர் படை !!
தேடி அலைகின்றார் ...! (?)
எங்கே..?.எங்கே..? எங்கே ? என்று
தேடி அலைகின்றார் !-இறைவன்
எங்கே ? எங்கே ? எங்கே என்று
தேடி அலைகின்றார் ! !
அங்கும் இங்கும் எங்கும் தானே
தேடி அலைகின்றார் ;
அகிலமெலாமே இறைவனைத் தானே
தேடி அலைகின்றார்..! !
அன்பும் பண்பும் தொலைத்தே இறைவனைத்
தேடி அலைகின்றார் ;
அகிம்சை மறந்தே இறைவனைத் தானே
தேடி அலைகின்றார் !!
காசும் பொருளும் கொடுத்தே இறைவனை
வாங்கிட நினைக்கின்றார்..! (?)
கருணை மறந்தே இறைவனைத் தானே
காணத் துடிக்கின்றார் !! (?)
சாதியின் பெயரால் சாமியைச் சொல்லி
சாதிக்க நினைக்கின்றார் !
சாக்கடை நீரை சந்தனம் என்று
சத்தியம் செய்கின்றார்..!!
இருக்குமிடத்தை மறந்தே இறைவனை
இல்லாத இடந்தனிலே
எங்கே ..? எங்கே..? எங்கே..? என்று
தேடி அலைகின்றார்...!-ஆம்
சிலர் தேடி அலைகின்றார் !! (?)
No comments:
Post a Comment